/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
தீப்பிடித்து 2 வீடு எரிந்து சாம்பல்
/
தீப்பிடித்து 2 வீடு எரிந்து சாம்பல்
ADDED : மே 05, 2025 05:58 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருக்கோவிலுார்; மணலுார்பேட்டை அருகே 2 கூரை வீடுகள் தீப்பற்றி எரிந்து சாம்பலானது.
மணலுார்பேட்டை அடுத்த சு.கள்ளிப்பாடி கிராமத்தைச் சேர்ந்தவர் முத்தையன் மகன் முருகன், 45; இவரது பக்கத்து வீட்டைச் சேர்ந்தவர் ராஜாமணி, 50; இரு குடும்பத்தாரும் குடும்பத்துடன் பெங்களூருவில் கூலி வேலை செய்து வருகின்றனர்.
இருவரின் வீடுகளும் பூட்டப்பட்டிருந்த நிலையில், நேற்று மாலை 6:30 மணிக்கு, திடீரென தீ பற்றியது.
காற்று பலமாக வீசியதால் தீ வேகமாக பரவி கொழுந்து விட்டு எரிந்தது. இதனை பார்த்த கிராம மக்கள் ஒன்று திரண்டு தீயை அணைத்தனர்.
ஆனாலும், வீட்டிலிருந்த அனைத்து பொருட்களும் எரிந்து சாம்பலானது.