ADDED : பிப் 04, 2024 03:59 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ரிஷிவந்தியம் : கீழத்தேனுாரில் பணம் கொடுக்கல், வாங்கல் தொடர்பாக ஏற்பட்ட தகராறில் 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
கள்ளக்குறிச்சி அடுத்த மோ.வன்னஞ்சூரைச் சேர்ந்தவர் மாரி, 60; செட்டிதாங்கல் பகுதியைச் சேர்ந்தவர் பெருமாள் மகன் ஓசுரான். இருவருக்குமிடையே பணம் கொடுக்கல் வாங்கலில் தகராறு ஏற்பட்டு, முன்விரோதம் இருந்தது.
கடந்த ஜனவரி 24ம் தேதி கீழத்தேனுார் கிராமத்தில் ஓசுரான் தரப்பினர் மாரியிடம் பணம் கேட்டு தகாறு செய்தனர். இதில் இரு தரப்பினரும் தாக்கிக் கொண்டனர்.
இதுகுறித்த இரு தரப்பு புகாரின் பேரில், ஓசுரான், காளியப்பன், பெரியமுத்து, 42; மாரி மகன்கள் கோபால், சக்திவேல், 30; உட்பட 9 பேர் மீது வழக்குப் பதிந்து, பெரியமுத்து, சக்திவேல் ஆகிய 2 பேரையும் கைது செய்தனர்.