/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
மது பாட்டில் விற்ற 2 பேர் கைது
/
மது பாட்டில் விற்ற 2 பேர் கைது
ADDED : அக் 14, 2024 09:11 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கச்சிராயபாளையம் : கச்சிராயபாளையம் பகுதியில் மது பாட்டில் விற்ற 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
கச்சிராயபாளையம் சப் இன்ஸ்பெக்டர் சபரிமலை தலமையிலான போலீசார் நேற்று காலை 8:00 மணியளவில் ரோந்து பணி மேற்கொண்டனர்.
அப்போது புதிய பஸ் நிலையத்தில் மது பாட்டில் விற்ற காமராஜர் நகர் பகுதியைச் சேர்ந்த ராமநாதன் மகன் குணசேகரன், 29;, வடக்கனந்தல் அய்யாவு மகன் ராஜதுரை, 29; ஆகிய 2 பேரை கைது செய்து, மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.