/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
வேன் மோதி பைக்கில் சென்ற 2 பேர் படுகாயம்
/
வேன் மோதி பைக்கில் சென்ற 2 பேர் படுகாயம்
ADDED : ஜூன் 29, 2025 03:29 AM
சின்னசேலம்:சின்னசேலம் அருகே, தனியார் பள்ளி வேன் மோதிய விபத்தில், பைக்கில் சென்ற 2 பேர் படுகாயம் அடைந்தனர்.
சின்னசேலம் அடுத்த பாண்டியன் குப்பம் கிராமத்தை சேர்ந்தவர் பெருமாள் மகன் வெங்கடேசன், 27; அதே பகுதியை சேர்ந்த ராஜேந்திரன் மகன் சின்னதுரை, 25; இந்த இருவரும் நேற்று முன்தினம் இரவு 7:30 மணிக்கு,
மேல் நாரியப்பனுார், கல்லா நத்தம் சாலையில், பைக்கில் சென்றனர்.
அப்போது எதிரே ஊனத்துார் கிராமத்தை சேர்ந்த சுந்தர்ராஜன் மகன் சின்னதுரை, 33; என்பவர் ஓட்டி வந்த தனியார் பள்ளி வேன், அந்த பைக் மீது மோதியது.
இதில் படுகாயம் அடைந்த வெங்கடேசன் மற்றும் சின்னதுரை ஆகிய இருவரும், கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டனர். சின்னசேலம் போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.