/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
மதுபாட்டில் விற்ற 2 பேர் கைது
/
மதுபாட்டில் விற்ற 2 பேர் கைது
ADDED : அக் 14, 2024 09:04 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி அருகே மதுபாட்டில் விற்ற பெண் உட்பட 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
கள்ளக்குறிச்சி அடுத்த தென்கீரனுார் மற்றும் நீலமங்கலம் காத்தி நகர் பகுதியில் மதுபாட்டில்கள் விற்பனை செய்யப்படுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் கள்ளக்குறிச்சி போலீசார் நேற்று முன்தினம் அப்பகுதியில் சோதனையில் ஈடுபட்டனர்.
அதில் தென்கீரனுார் தடிகாரன் மனைவி கொளஞ்சி, 50; நீலமங்கலம், காந்தி நகர் கார்த்திகேயன், 45; ஆகியோர் தங்களது வீட்டின் அருகே மதுபாட்டில் விற்பனை செய்தது தெரிந்தது. இதனையடுத்து 2 பேரையும் போலீசார் கைது செய்து மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.