/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
கஞ்சா வைத்திருந்த 2 வாலிபர்கள் கைது
/
கஞ்சா வைத்திருந்த 2 வாலிபர்கள் கைது
ADDED : செப் 22, 2025 11:18 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
உளுந்துார்பேட்டை; உளுந்துார்பேட்டை அருகே கஞ்சா வைத்திருந்த 2 வாலிபர்களை போலீசார் கைது செய்தனர்.
உளுந்துார்பேட்டை அடுத்த ஏ.கொளத்துார் பகுதியில் மதுவிலக்கு அமலாக்க பிரிவு போலீசார் நேற்று முன்தினம் மாலை ரோந்து சென்றனர்.
அப்போது, அப்பகுதியில் உள்ள ஏரிக்கரையில் சந்தேகப்படும்படி நின்றிருந்த 2 வாலிபர்களை பிடித்து விசாரணை நடத்தியதில், விற்பனைக்காக கஞ்சா வைத்திருந்தது தெரியவந்தது.
உடன் அவர்களிடமிருந்த 250 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்து, அதே பகுதியைச் சேர்ந்த பிச்சமுத்து மகன் அணில், 25; பலராமன் மகன் மாரிமுத்து, 21; ஆகிய இருவரையும் கைது செய்தனர்.