/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
27ம் தேதி விவசாயிகள் குறைகேட்புக் கூட்டம்
/
27ம் தேதி விவசாயிகள் குறைகேட்புக் கூட்டம்
ADDED : செப் 23, 2024 11:51 PM
கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சி கலெக்டர் அலுவலகத்தில் வரும் 27ம் தேதி விவசாயிகள் குறைகேட்புக் கூட்டம் நடக்கிறது.
கலெக்டர் பிரசாந்த் செய்திக்குறிப்பு:
கலெக்டர் அலுவலகத்தில் வரும் 27ம் தேதி மாதாந்திர விவசாயிகள் குறைகேட்புக் கூட்டம் காலை 11:00 மணிக்கு துவங்குகிறது.
கூட்டத்தில் வேளாண் உழவர் நலத்துறை, தோட்டக்கலை துறை, வேளாண் விற்பனை மற்றும் வேளாண் வணிகம், வேளாண் பொறியியல் துறை, கால்நடை பராமரிப்பு துறை, கூட்டுறவுத் துறை, வருவாய் துறை, ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சி துறை. வங்கியாளர்கள் மற்றும் பிறசார்பு துறை அலுவலர்கள் பலர் பங்கேற்று விவசாயிகளின் குறைகள் மற்றும் கோரிக்கைகளுக்கு பதில் அளிக்க உள்ளனர்.
எனவே, கள்ளக்குறிச்சி மாவட்ட விவசாயிகள் மற்றும் விவசாய சங்க பிரதிநிதிகள் தங்களது பொது கோரிக்கைகள், தனிநபர் குறைகள் குறித்த மனுக்களை நேரடியாக அளித்து பயன்பெறலாம்.
இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.