sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, நவம்பர் 07, 2025 ,ஐப்பசி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கள்ளக்குறிச்சி

/

காப்பர் கம்பி திருடிய 3 பேர் கைது

/

காப்பர் கம்பி திருடிய 3 பேர் கைது

காப்பர் கம்பி திருடிய 3 பேர் கைது

காப்பர் கம்பி திருடிய 3 பேர் கைது


ADDED : நவ 07, 2025 12:30 AM

Google News

ADDED : நவ 07, 2025 12:30 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கச்சிராயபாளையம்: மின்மாற்றிகளில் காப்பர் கம்பிகளை திருடிய ௩ பேரை போலீசார் நேற்று கைது செய்தனர்.

கல்வராயன்மலையில் உள்ள மணியார்பாளையம் மற்றும் நொச்சிமேடு கிராமத்தில் உள்ள மின்மாற்றிகளில் இருந்த காப்பர் கம்பிகளை கடந்த 2 மாதங்களுக்கும் முன்பு மர்ம நபர்கள் திருடி சென்றனர்.

இதே போல் கச்சிராயபாளையம் அடுத்த கடத்துார் மற்றும் வெங்கட்டாம்பேட்டை பகுதியில் இருந்த இரண்டு மின்மாற்றிகளிலும் காப்பர் கம்பிகளை மர்ம நபர்கள் திருடி சென்றனர். இது குறித்து கரியாலுார் மற்றும் கச்சிராயபாளையம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வந்தனர். போலீசார் விசாரணையில் சேலம் மாவட்டம், கல்வராயன்மலை கும்பாபாடி கிராமத்தை சேர்ந்த சின்னாண்டி மகன் சரத்குமார் 26, வலக்காப்பட்டு கிராமத்தைச் சேர்ந்த பொன்னுசாமி மகன் பிரகாஷ் 24, தொரடிப்பட்டு கிராமத்தை சேர்ந்த திருமலை மகன் லட்சுமணன் 33, ஆகிய மூன்று பேரை கரியாலுார் போலீசார் சந்தேகத்தின் பேரில் அழைத்து சென்று விசாரித்தனர். விசாரணையில் கல்வராயன் மலை மற்றும் கச்சிராயபாளையம் பகுதிகளில் மின்மாற்றிகளில் காப்பர் கம்பிகளை திருடி சென்றதை ஒப்புக்கொண்டனர்.

மூன்று பேரையும் கரியலுார் போலீசார் நேற்று கைது செய்து சிறையில் அடைத்தனர்.






      Dinamalar
      Follow us