/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
வாலிபரைத் தாக்கிய 3 பேர் கைது
/
வாலிபரைத் தாக்கிய 3 பேர் கைது
ADDED : ஜன 22, 2024 12:42 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ரிஷிவந்தியம் : பாசாரில் முன்விரோதம் காரணமாக ஒருவரைத் தாக்கிய 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
ரிஷிவந்தியம் அடுத்த பாசார் கிராமத்தைச் சேர்ந்தவர் செங்கான் மகன் செல்லதுரை, 23; இவர், அதே கிராமத்தைச் சேர்ந்த பெண் ஒருவருக்கு தவறாக போன் செய்தது தொடர்பாக பிரச்னை ஏற்பட்டு முன்விரோதம் உள்ளது.
இந்நிலையில் கடந்த 18ம் தேதி அதே கிராமத்தைச் சேர்ந்த தங்கராசு மகன் சுரேஷ் உட்பட 6 பேர் செல்லதுரையை தாக்கி, கொலை மிரட்டல் விடுத்தனர்.
இது குறித்த புகாரின் பேரில், சுரேஷ் உட்பட 6 பேர் மீது வழக்குப் பதிந்து, சுரேஷ், தங்கராசு, 60; ராஜதுரை, 30; ஆகிய 3 பேரை போலீசார் கைது செய்தனர்.