/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
கடைகளில் 30 கிலோ குட்கா பறிமுதல் வடமாநிலத்தவர்கள் உட்பட 8 பேர் கைது
/
கடைகளில் 30 கிலோ குட்கா பறிமுதல் வடமாநிலத்தவர்கள் உட்பட 8 பேர் கைது
கடைகளில் 30 கிலோ குட்கா பறிமுதல் வடமாநிலத்தவர்கள் உட்பட 8 பேர் கைது
கடைகளில் 30 கிலோ குட்கா பறிமுதல் வடமாநிலத்தவர்கள் உட்பட 8 பேர் கைது
ADDED : அக் 16, 2024 04:21 AM

கச்சிராயபாளையம், : கச்சிராயபாளையம் பகுதியில் குட்கா பொருட்கள் சப்ளை செய்த 3 வடமாநில வாலிபர்கள் உட்பட 8 பேரை போலீசார் கைது செய்தனர்.
கச்சிராயபாளையம் சப் இன்ஸ்பெக்டர் சபரி மலை தலமையிலான போலீசார் நேற்று கச்சிராயப்பாளையம் பகுதியில் உள்ள கடைகளில் சோதனை செய்தனர்.
இதில் பழைய பஸ் நிலையம் அருகே உள்ள மனோகரன், 63;, மளிகை கடையில் சோதனை செய்ததில் 6 கிலோ குட்கா பொருட்கள் மறைத்து வைத்து விற்பனை செய்தது தெரிய வந்தது.
மனோகரை கைது செய்து போலீசார் விசாரணை நடத்தியதில். அதே பகுதியைச் சேர்ந்த மாரிமுத்து, 68; என்பவர் மூலம் சேலம் புதிய பஸ் ஸ்டாண்ட் அருகே பிளாஸ்டிக் பொருட்கள் கடை நடத்தி வரும் ராஜஸ்தான் மாநிலம், ஜலோர்சைலா வட்டம், சிலைகாமந்தர் பகுதியை சேர்ந்த பாபுஜி மகன் லகாராம்ல 34;, இவரது உறவினர் மதன்குமார் 30, கிருஷ்னகுமார், 25; ஆகியோர் கச்சிராயபாளையம் பகுதியில் உள்ள கடைகளுக்கு குட்கா சப்ளை செய்தது தெரியவந்தது.
இவர்களிடம் குட்கா பொருட்கள் வாங்கி விற்பனை செய்த மட்டிகைக்குறிச்சி முரளிசங்கர்,43; ஜெய்சங்கர், 52; திருக்கோவிலுார் வட்டம், வேங்கூரைச் சேர்ந்தை அசோக்குமார், 35; உள்ளிட்ட 8 பேரை கச்சிராயபாளையம் போலீசார் கைது செய்தனர். மேலும் அவர்களிடமிருந்து 30 கிலோ குட்கா பொருட்களை பறிமுதல் செய்தனர்.