/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
சூளாங்குறிச்சியில் 32 மி.மீ., மழை 5 கூரை வீடுகள் சேதம்
/
சூளாங்குறிச்சியில் 32 மி.மீ., மழை 5 கூரை வீடுகள் சேதம்
சூளாங்குறிச்சியில் 32 மி.மீ., மழை 5 கூரை வீடுகள் சேதம்
சூளாங்குறிச்சியில் 32 மி.மீ., மழை 5 கூரை வீடுகள் சேதம்
ADDED : அக் 18, 2025 07:21 AM
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் நேற்று முன்தினம் அதிகபட்சமாக சூளாங்குறிச்சி பகுதியில் 32 மி.மீ., மழை பெய்துள்ளது. மாவட்டத்தில் 5 பேரின் கூரை வீடுகள் இடிந்து சேதமடைந்தது.
நேற்று முன்தினம் முதல் நேற்று காலை வரை பதிவான மழையளவு மி.மீ., விபரம்:
கள்ளக்குறிச்சியில் 7.5, தியாகதுருகத்தில் 6, விருகாவூர் 5, கச்சிராயபாளையம் 4, கோமுகி அணை 5, மூரார்பாளையம் 3, வடசிறுவள்ளூர் 10, கடுவனுார் 1, மூங்கில்துறைப்பட்டு 18, அரியலுார் 5, சூளாங்குறிச்சி 32, ரிஷிவந்தியம் 8, கீழ்பாடி 9, கலையநல்லுார் 18, மணலுார்பேட்டை 4, சூளாங்குறிச்சி மணிமுக்தா அணை 28, வாணாபுரம் 5, மாடாம்பூண்டி 11, திருக்கோவிலுார் (வடக்கு) 1, திருப்பாலபந்தல் 12, வேங்கூர் 2, பிள்ளையார்குப்பம் 7.50, எறையூர் 8, உ.கீரனுார் 8 என மாவட்டம் முழுவதும் 218 மி.மீ., மழை அளவு பெய்தது. சராசரியாக 9.08 மி.மீ., அளவு மழை பதிவானது.
மழையில் சேஷசமுத்திரம் சேர்ந்த கோவிந்தன், சோமாசிபாளையம், சுந்தரம், கச்சிராயபாளையம் அம்மாபேட்டை சுந்தரவேல், பரிகம் செல்லபாங்கி, கரடிசித்துார் ஆறுமுகம் ஆகியோரின் கூரை வீடுகள் சேதமடைந்தன.