/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
இலங்கைத் தமிழரை தாக்கிய 4 பேர் கைது
/
இலங்கைத் தமிழரை தாக்கிய 4 பேர் கைது
ADDED : மார் 17, 2024 05:40 AM
கள்ளக்குறிச்சி: சின்னசேலம் புறவழிச் சாலையில் இலங்கைத் தமிழரைத் தாக்கி, பைக்கை எரித்த 4 பேரை போலீசார் கைது செய்தனர்.
சின்னசேலம் அருகே இலங்கைத் தமிழர் முகாமைச் சேர்ந்தவர்கள் மோகன் மகன் பகிரதன், 29; செல்வகுமார். நண்பர்கள். இருவரும் நேற்று முன்தினம் காலை 8:30 மணியளவில் டீ குடிக்க யமாகா பைக்கில் சின்னசேலம் புறவழிச்சாலையில் உள்ள கடைக்குச் சென்றனர்.
அங்கு, மரவாநத்தம் கிராமத்தைச் சேர்ந்தவர் வீரப்பன், 35; மற்றும் அவரது ஆதரவாளர்களுடன் ஏற்பட்ட தகராறில், வீரப்பன் தரப்பினர் பகிரதன், செல்வகுமார் ஆகிய இருவரையும் தாக்கி அவர்கள் வந்த பைக்கை எரித்தனர்.
இது குறித்து பகிரதன் அளித்த புகாரின் பேரில், வீரப்பன், 35; வாணகொட்டாய் பகுதியைச்சேர்ந்த சதீஷ்குமார், 34; தேவேந்திரன் மகன் சந்துரு, 24; பாண்டியன்குப்பம் முருகன் மகன் ரஞ்சித்குமார், 24; ஆகிய 4 பேர் மீதும் சின்னசேலம் போலீசார் வழக்குப் பதிந்து கைது செய்தனர்.

