sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கள்ளக்குறிச்சி

/

சாலையில் வேன் கவிழ்ந்து 4 பேர் படுகாயம்

/

சாலையில் வேன் கவிழ்ந்து 4 பேர் படுகாயம்

சாலையில் வேன் கவிழ்ந்து 4 பேர் படுகாயம்

சாலையில் வேன் கவிழ்ந்து 4 பேர் படுகாயம்


ADDED : ஆக 04, 2025 07:07 AM

Google News

ADDED : ஆக 04, 2025 07:07 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ரிஷிவந்தியம் : பாவந்துாரில் வேன் கவிழ்ந்த விபத்தில் 4 பேர் படுகாயமடைந்தனர்.

நாமக்கல் மாவட்டம், பரமத்தி வேலுார் தாலுகா, குப்புச்சிபாளையத்தை சேர்ந்தவர் செந்தில்குமார்,49; இவர் தனது குடும்பத்தினருடன் குலதெய்வ கோவிலான மேல்மலையனுாருக்கு டி.எண்.28 ஏ.பி-2331 என்ற பதிவெண் கொண்ட வேனில் நேற்று முன்தினம் சென்றார். வேனை நாமக்கல் மாவட்டம், மோகலுார் தாலுகா, ஊஞ்சப்பாளையத்தை சேர்ந்த முருகேசன் மகன் விமல்குமார்,35; ஓட்டினார்.

நேற்று அதிகாலை 3 மணியளவில் பாவந்துார் அய்யனார்கோவில் வளைவு பகுதியில் திரும்பிய போது, எதிர்திசையில் வரும் வாகனத்திற்கு வழி விடுவதற்காக விமல்குமார் பிரேக் அடித்துள்ளார்.

அப்போது, வேன் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில், வேனில் பயணித்த செந்தில்குமார்,48; ராம்குமார்,34; லோகநாதன்,63; விமல்குமார்,35; ஆகியோர் படுகாயமடைந்தனர். உடன் படுகாயமடைந்தவர்களை 108 ஆம்புலன்ஸ் மூலம் கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு சேர்த்தனர்.

புகாரின் பேரில் ரிஷிவந்தியம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us