sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கள்ளக்குறிச்சி

/

சாலை மறியலில் ஈடுபட முயன்ற பா.ம.க., நிர்வாகிகள் 44 பேர் கைது

/

சாலை மறியலில் ஈடுபட முயன்ற பா.ம.க., நிர்வாகிகள் 44 பேர் கைது

சாலை மறியலில் ஈடுபட முயன்ற பா.ம.க., நிர்வாகிகள் 44 பேர் கைது

சாலை மறியலில் ஈடுபட முயன்ற பா.ம.க., நிர்வாகிகள் 44 பேர் கைது


ADDED : நவ 27, 2024 08:25 AM

Google News

ADDED : நவ 27, 2024 08:25 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சி நான்கு முனை சந்திப்பில் முதல்வர் ஸ்டாலினை கண்டித்து சாலைமறியலில் ஈடுபட முயன்ற பா.ம.க., நிர்வாகிகள் 44 பேரை போலீசார் கைது செய்தனர்.

பா.ம.க., நிறுவனர் ராமதாசுக்கு எதிராக கருத்து தெரிவித்த தமிழக முதல்வர் ஸ்டாலினை கண்டித்து, கள்ளக்குறிச்சியில் பா.ம.க., சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டது.

இதையொட்டி, பா.ம.க., மேற்கு மாவட்ட செயலாளர் தமிழரசன் தலைமையில் அக்கட்சி நிர்வாகிகள் நான்கு முனை சந்திப்பு பகுதிக்கு நேற்று காலை 10.15 மணியளவில் வந்தனர்.

உடன், ஆர்ப்பாட்டத்திற்கு அனுமதி மறுக்கப்பட்டதாக போலீசார் தெரிவித்து, கைது செய்தனர். ஆர்ப்பாட்டத்திற்கு அனுமதி மறுக்கப்பட்டதை கண்டித்து பா.ம.க.,வினர் சிலர் சாலை மறியலில் ஈடுபட முயற்சித்தனர்.

மறியலில் ஈடுபட முயன்ற நிர்வாகிகளை போலீசார் குண்டு கட்டாக துாக்கி பஸ்சில் ஏற்றினர்.

கள்ளக்குறிச்சியில் ஆர்ப்பாட்டம், மறியலில் ஈடுபட முயன்ற பா.ம.க., நிர்வாகிகள் 44 பேரை போலீசார் கைது செய்தனர்.

அப்போது, மாவட்ட தலைவர் கோவிந்தராஜ், முன்னாள் எம்.எல்.ஏ., காசாம்பூ பூமாலை, மாநில செயற்குழு உறுப்பினர் ராமு, வன்னியர் சங்க மாவட்ட தலைவர் நாராயணன், துணை செயலாளர் ஏழுமலை, இளைஞர் சங்க மாவட்ட செயலாளர் பாபு, ஒன்றிய செயலாளர்கள் அய்யப்பன், அன்பரசன், பாலு உட்பட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.






      Dinamalar
      Follow us