/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
கஞ்சா விற்ற 5 பேர் கைது 2.100 கிலோ பறிமுதல்
/
கஞ்சா விற்ற 5 பேர் கைது 2.100 கிலோ பறிமுதல்
ADDED : டிச 06, 2024 06:49 AM
தியாகதுருகம்,: தியாகதுருகத்தில் கஞ்சா விற்றது தொடர்பாக 5 பேரை போலீசார் கைது செய்து 2.100 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.
தியாகதுருகம் இன்ஸ்பெக்டர் மலர்விழி நேற்று முன்தினம் பழனியப்பா தெருவில் சோதனை மேற்கொண்டார். அப்போது, அப்பகுதியில் குமார், 41; என்பவர் வீட்டில் விற்பனைக்காக 2.100 கிலோ கஞ்சாவை பதுக்கி வைத்திருந்தது தெரிந்தது.
அவரிடம் நடத்திய விசாரணையில், தியாகதுருகம் பள்ளிக்கூட தெருவை சேர்ந்த ரவி, 50; நல்லான்குளத்தெரு ஏழுமலை மகன் சீனிவாசன், 23; நரிக்குறவர் காலனி சங்கர் மகன் வல்லரசு, பாப்பாங்குளத்தெரு முகமது ரபீக் மகன் முகமது ஷாகில், 23; ஆகியோருக்கு தொடர்பு இருப்பது தெரியவந்தது.
உடன், வழக்குப் பதிந்த போலீசார், 5 பேரையும் கைது செய்து, கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.