நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தியாகதுருகம், -தியாகதுருகத்தில் பணம் வைத்த சூதாடிய 5 பேரை போலீசார் கைது செய்தனர்.
தியாகதுருகம் இன்ஸ்பெக்டர் கமலகாசன் தலைமையில் போலீசார் கடந்த 16ம் தேதி இரவு 11:30 மணிக்கு ரோந்து சென்றனர்.
அப்போது காந்திநகர் மாரியம்மன் கோவில் முன் பணம் வைத்து சூதாடிய காந்திநகர் வரதன், 41; அரசன், 53; கஸ்துாரிபா காந்தி நகர் ராம்குமார், 38; நாகம்மை தெரு கண்ணன், 42; களமருதுார் ஏழுமலை, 39; ஆகிய 5 பேரை கைது செய்தனர்.