/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் மழையில் 51 வீடுகள் சேதம் 6 கால்நடைகள் பலி
/
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் மழையில் 51 வீடுகள் சேதம் 6 கால்நடைகள் பலி
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் மழையில் 51 வீடுகள் சேதம் 6 கால்நடைகள் பலி
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் மழையில் 51 வீடுகள் சேதம் 6 கால்நடைகள் பலி
ADDED : அக் 23, 2025 11:22 PM
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் பெய்த மழையில் மொத்தம் 51 கூரை வீடுகள் இடிந்து சேதமானது. 6 கால்நடைகள் இறந்துள்ளது.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் வடக்கிழக்கு பருவ மழை துவங்கி பெய்து வருகிறது. அதில் நேற்று முன்தினம் காலை 6 மணியில் இருந்து நேற்று காலை 6 மணி வரை பெய்த மழையின் அளவு மி.மீ., அளவில்; கள்ளக்குறிச்சி 38, தியாகதுருகம் 75, விருகாவூர் 28, கச்சிராயபாளையம் 39, கோமுகி அணை 31, மூரார்பாளையம் 36, வடசிறுவள்ளூர் 41, கடுவனுார் 22, மூங்கில்துறைப்பட்டு 45, அரியலுார் 22, சூளாங்குறிச்சி 24, ரிஷிவந்தியம் 23, கீழ்பாடி 10, கலையநல்லுார் 34, மணலுார்பேட்டை 28, சூளாங்குறிச்சி மணிமுக்தா அணை 35, வாணாபுரம் 22, மாடாம்பூண்டி 16, திருக்கோவிலுார் (வடக்கு) 23, திருப்பாலபந்தல் 16, வேங்கூர் 26, பிள்ளையார்குப்பம் 4, எறையூர் 3 என மாவட்டம் முழுவதும் 643 மி.மீ., மழை பெய்தது.
சராசரியாக 27 மி.மீ., மழை பதிவானது. மாவட்டத்தில் அதிகபட்சமாக தியாகதுருகத்தில் 75 மி.மீ., மழை பெய்துள்ளது.
மேலும், மாவட்டத்தில் பெய்த பலத்த மழையில் பகுதி மற்றும் முழுவதும் என மொத்தம் 51 கூரை வீடுகள் இடிந்து சேதமாகியுள்ளது. 5 பசுமாடுகள், ஒரு ஆடு என 6 கால்நடைகள் இறந்துள்ளதாக அரசு அதிகாரிகள் தெரிவித்தனர்.

