sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், செப்டம்பர் 08, 2025 ,ஆவணி 23, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கள்ளக்குறிச்சி

/

சங்கராபுரத்தில் புகையிலை பொருள் விற்ற 7 கடைக்கு சீல்

/

சங்கராபுரத்தில் புகையிலை பொருள் விற்ற 7 கடைக்கு சீல்

சங்கராபுரத்தில் புகையிலை பொருள் விற்ற 7 கடைக்கு சீல்

சங்கராபுரத்தில் புகையிலை பொருள் விற்ற 7 கடைக்கு சீல்


ADDED : ஜூலை 20, 2025 12:31 AM

Google News

ADDED : ஜூலை 20, 2025 12:31 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சங்கராபுரம்.: சங்கராபுரம் பகுதியில் புகையிலை பொருட்கள் விற்ற கடைகளுக்கு சீல் வைக்கப்பட்டது.

சங்கராபுரம் பகுதியில் குட்கா உள்ளிட்ட புகையிலை பொருட்கள் விற்பனை ஜரூராக நடக்கிறது. புகையிலை பொருட்கள் விற்பனையை கட்டுப்படுத்த பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர். இந்நிலையில், கடந்த 15 நாட்களுக்கு முன்பு, சுகாதாரத்துறையினர் நடத்திய ஆய்வில் சங்கராபுரம் பகுதியில் 7 கடைகளில் தடை செய்யப்பட்ட குட்கா விற்பனை செய்வது தெரியவந்தது. போலீசார் 7 கடை உரிமையாளர்கள் மீதும் வழக்கு பதிவு செய்தனர்.

இந்நிலையில், உணவு பாதுகாப்பு அலுவலர் சண்முகம் தலைமையிலான அலுவலர்கள் பூட்டை ரோடு, எஸ்.குளத்துார், விரியூர், கடுவனுார், புதுப்பாலப்பட்டு ஆகிய பகுதிகளில் உள்ள கடைகளில் நேற்று திடீர் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது தமிழக அரசு தடை செய்த குட்கா உள்ளிட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்த சங்கராபுரம் பூட்டை ரோடு கோதண்டபாணி பெட்டிக்கடை, ஆறுமுகம் டீக்கடை, விரியூர் வின்சன்ட் ஆரோக்கியராஜ், தங்கபிரகாசம், கடுவனுார் சந்தோஷ்குமார், எஸ்.குளத்துார் பாலசுப்ரமணி, புதுப்பாலப்பட்டு கோபாலகிருஷ்ணன் ஆகியோரது கடைகளுக்கு உணவு பாதுகாப்பு அதிகாரிகள் பூட்டி சீல் வைத்தனர். உடன் ஏட்டு மாரியப்பன் மற்றும் போலீசார் உடனிருந்தனர்.






      Dinamalar
      Follow us