sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கள்ளக்குறிச்சி

/

70 ஆண்டு கால ஆட்சியை மாற்றியமைக்க வேண்டும் பா.ஜ., மாநில தலைவர் அண்ணாமலை பேச்சு

/

70 ஆண்டு கால ஆட்சியை மாற்றியமைக்க வேண்டும் பா.ஜ., மாநில தலைவர் அண்ணாமலை பேச்சு

70 ஆண்டு கால ஆட்சியை மாற்றியமைக்க வேண்டும் பா.ஜ., மாநில தலைவர் அண்ணாமலை பேச்சு

70 ஆண்டு கால ஆட்சியை மாற்றியமைக்க வேண்டும் பா.ஜ., மாநில தலைவர் அண்ணாமலை பேச்சு


ADDED : ஜன 30, 2024 03:42 AM

Google News

ADDED : ஜன 30, 2024 03:42 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

உளுந்துார்பேட்டை : பா.ஜ., மாநில தலைவர் அண்ணாமலை, கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூர்பேட்டையில் நேற்று 'என் மண், என் மக்கள்' பாதயாத்திரை மேற்கொண்டார்.

அவருக்கு, கள்ளக்குறிச்சி மாவட்ட தலைவர் அருள் தலைமையில் கட்சி நிர்வாகிகள் வரவேற்பு அளித்தனர். அப்போது அவர் பேசியது:

தமிழகத்தில் ஆண்ட கட்சிகள், ஆளும் கட்சிகள் மக்களின் நலனின் அக்கறை செலுத்தவில்லை. 2024ம் ஆண்டு லோக்சபா தேர்தல் நமக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு. தமிழகத்தில் 70 ஆண்டுகால ஆட்சியை மாற்றி அமைக்க வேண்டும்.

தமிழகத்தில் கல்வித்திறன் மோசமான நிலையில் உள்ளது. சாதாரண தேர்வை கண்டு மாணவர்கள் அச்சப்பட வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். நீட் தேர்வை வைத்து அரசியல் செய்கின்றனர்.

இந்தியாவில் உள்ள எல்லா மாநிலத்திலும் மூன்று மொழிகளை மாணவர்கள் கற்கின்றனர். ஆனால் தமிழகத்தில் மட்டும் இரு மொழி கல்வியை கற்கின்றனர்.

தமிழகத்தில் தி.மு.க., அரசு வந்த பிறகு வேலை வாய்ப்பு உருவாக்கவில்லை. உளுந்தூர்பேட்டையில் தொழில் வளர்ச்சி வேண்டும்.

2024 தேர்தலில் 400 எம்.பி.க்களை தாண்டி வெற்றி பெற்று மத்தியில் ஆட்சியை மோடி அமைப்பார். தமிழகத்தின் 38 எம்.பி.,க்கள் ஏதாவது சாதித்தார்களா.

மோடியை எதிர்க்கும் ஆளுமை மிக்க தலைவர்கள் யாரும் இல்லை. உளுந்தூர்பேட்டையில் முன்பு 108 குளங்கள் இருந்தன. இப்போது அவை எங்கே இருக்கிறது என தெரியாததால் விவசாயம் செய்ய முடியவில்லை, குடிநீர் பிரச்னை ஏற்பட்டுள்ளது.

இவ்வாறு அண்ணாமலை பேசினார்.






      Dinamalar
      Follow us