sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கள்ளக்குறிச்சி

/

38 இடங்களில் 78 கண்காணிப்பு கேமரா; திருக்கோவிலூரில் காவல் துறை தீவிரம்

/

38 இடங்களில் 78 கண்காணிப்பு கேமரா; திருக்கோவிலூரில் காவல் துறை தீவிரம்

38 இடங்களில் 78 கண்காணிப்பு கேமரா; திருக்கோவிலூரில் காவல் துறை தீவிரம்

38 இடங்களில் 78 கண்காணிப்பு கேமரா; திருக்கோவிலூரில் காவல் துறை தீவிரம்


ADDED : ஜன 09, 2024 01:15 AM

Google News

ADDED : ஜன 09, 2024 01:15 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருக்கோவிலுாரில் குற்ற சம்பவங்களைத் தடுக்கும் பொருட்டு 38 இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தும் பணியை காவல்துறை மேற்கொண்டுள்ளது.

பொதுவெளியில் நடக்கும் குற்றங்களை முற்றிலுமாக தடுக்கும் பணியில் காவல் துறை தீவிரமாக ஈடுபட்டுள்ளது. குற்ற செயல்களில் ஈடுபடுவோரை உடனடியாக கண்டுபிடித்து கைது செய்ய சி.சி.டி.வி., கேமராவின் பங்கு முக்கியமானதாக உள்ளது. அப்படியே குற்றங்கள் நடந்தாலும் அதனை காட்டிக் கொடுக்கும் மூன்றாவது கண்ணாக இருக்கும் சி.சி.டி.வி., கேமராவை திருக்கோவிலூர் நகராட்சி முழுதும் பொருத்த காவல்துறை நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.

இதற்காக அமைக்கப்படும் கட்டுப்பாட்டு அறை, சி.சி.டி.வி., கேமரா பொருத்த வேண்டிய முக்கியமான இடங்கள் உள்ளிட்டவை குறித்து ஆய்வு செய்யப்பட்டது. இதில் 38 இடங்களில் 78 கேமராக்களை பொருத்துவது என போலீசார் முடிவு செய்துள்ளனர்.

டி.எஸ்.பி., மனோஜ்குமார் உத்தரவின் பேரில், இன்ஸ்பெக்டர் பாலாஜி மேற்பார்வையில், சப் இன்ஸ்பெக்டர் அன்பழகன் மற்றும் போலீசார் தன்னார்வலர்களின் ஒத்துழைப்புடன் 8 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் உயர் திறன் கொண்ட கண்காணிப்பு கேமராக்களை பொருத்தும் பணியை காவல்துறை தற்போது மேற்கொண்டுள்ளது.

கட்டுப்பாட்டு அறை அமைத்து கண்காணிப்பதன் மூலம், நகரில் ஏற்படும் குற்ற சம்பவங்கள், போக்குவரத்து நெரிசல்களுக்கு உடனடி நடவடிக்கை மேற்கொண்டு தீர்வு காணப்படும் என போலீசார் தெரிவித்தனர்.






      Dinamalar
      Follow us