/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
அரசு பஸ் கண்டக்டர் வீட்டில் 80 சவரன், ரூ.18 லட்சம் கொள்ளை; சங்கராபுரம் அருகே துணிகரம்
/
அரசு பஸ் கண்டக்டர் வீட்டில் 80 சவரன், ரூ.18 லட்சம் கொள்ளை; சங்கராபுரம் அருகே துணிகரம்
அரசு பஸ் கண்டக்டர் வீட்டில் 80 சவரன், ரூ.18 லட்சம் கொள்ளை; சங்கராபுரம் அருகே துணிகரம்
அரசு பஸ் கண்டக்டர் வீட்டில் 80 சவரன், ரூ.18 லட்சம் கொள்ளை; சங்கராபுரம் அருகே துணிகரம்
ADDED : பிப் 16, 2024 07:21 AM

சங்கராபுரம் : சங்கராபுரம் அருகே அரசு பஸ் கண்டக்டர் வீட்டின் ஜன்னலை உடைத்து மர்ம நபர்கள் 80 சவரன் நகை மற்றும் ரூ.18 லட்சம் ரொக்கத்தை கொள்ளையடித்து சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கள்ளக்குறிச்சி மாவட்டம், சங்கராபுரம் அடுத்த எஸ்.வி.பாளையம் கிராமத்தை சேர்ந்தவர் அருள்ஜோதி,55; சங்கராபுரம் அரசு போக்குவரத்து கழக பணிமனை கண்டக்டர்.
இவர் கடந்த 12ம் தேதி, வீட்டை பூட்டிவிட்டு தனது மனைவி தமிழரசியுடன் புதுச்சேரியில் வசிக்கும் மகள் சவுந்தர்யா வீட்டிற்கு சென்றிருந்தார்.
நேற்று மதியம் இவரது வீட்டின் பின்பக்க ஜன்னல் உடைத்திருப்பதாக தகவல் கிடைத்து, அருள்ஜோதி வீடு திரும்பினார்.
வீட்டின் கதவை திறந்து பார்த்தபோது, பீரோவில் வைத்திருந்த 80 சவரன் நகை, 18 லட்சம் ரொக்கம் திருடு போயிருந்து தெரிய வந்தது.
தகவலறிந்த கள்ளக்குறிச்சி எஸ்.பி (பொ) தீபக் சவாச், ஏ.டி.எஸ்.பி., மணிகண்டன், திருக்கோவிலுார் டி.எஸ்.பி., மனோஜ்குமார், இன்ஸ்பெக்டர் விநாயகமுருகன், சப் இன்ஸ்பெக்டர் நரசிம்மஜோதி மற்றும் போலீசார் சம்பவ இடத்தை பார்வையிட்டனர்.
விழுப்புரத்தில் இருந்து வரவழைத்த மோப்ப நாய் ராக்கி, சம்பவ இடத்தில் இருந்து 1 கி.மீ., துாரம் வரை ஓடி நின்றது.
இதுகுறித்து சங்கராபுரம் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.