/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
சிறுமியை திருமணம் செய்த வாலிபர் 'போக்சோ'வில் கைது
/
சிறுமியை திருமணம் செய்த வாலிபர் 'போக்சோ'வில் கைது
ADDED : நவ 12, 2024 08:09 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
உளுந்துார்பேட்டை: உளுந்துார்பேட்டை அருகே 17 வயது சிறுமியை திருமணம் செய்த பட்டதாரி வாலிபரை போக்சோ சட்டத்தில் போலீசார் கைது செய்தனர்.
உளுந்துார்பேட்டை அடுத்த பெரும்பட்டு பகுதியைச் சேர்ந்தவர் ராஜா மகன் சதீஷ்குமார், 29; பி.இ., பட்டதாரியான இவர், 17 வயது சிறுமியை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
சிறுமி தற்போது 5 மாத கர்ப்பணியாக உள்ள நிலையில், அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக வந்த போது சிறுமியை திருமணம் செய்தது தெரிய வந்தது.
உளுந்துார்பேட்டை அனைத்து மகளிர் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிந்து சதீஷ்குமாரை கைது செய்தனர்.