sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கள்ளக்குறிச்சி

/

குழந்தை திருமணம் செய்த 4 பேர் மீது வழக்குப் பதிவு

/

குழந்தை திருமணம் செய்த 4 பேர் மீது வழக்குப் பதிவு

குழந்தை திருமணம் செய்த 4 பேர் மீது வழக்குப் பதிவு

குழந்தை திருமணம் செய்த 4 பேர் மீது வழக்குப் பதிவு


ADDED : அக் 23, 2024 06:31 AM

Google News

ADDED : அக் 23, 2024 06:31 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சி உட்கோட்டத்தில் குழந்தை திருமணம் செய்த 4 பேர் மீது அனைத்து மகளிர் போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள கிராமப்புறங்களில் அதிகளவு குழந்தை திருமணங்கள் நடக்கிறது.

திருமணத்திற்கு பிறகு கர்ப்பமாகும் சிறுமிகள் பரிசோதனைக்காக அருகாமையில் உள்ள அரசு மருத்துவமனை மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு செல்கின்றனர்.

அங்கு பரிசோதனை செய்யும் டாக்டர்கள், சிறு வயதிலேயே திருமணம் செய்து கொண்ட நபர்கள் குறித்து மாவட்ட சமூக நலத்துறைக்கு தகவல் தெரிவிக்கின்றனர்.

உடன், சமூக நலத்துறை அலுவலர்கள் விசாரணை செய்து சம்மந்தப்பட்ட நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி, போலீசில் புகார் அளிக்கின்றனர்.

அதன்படி, கள்ளக்குறிச்சி உட்கோட்டத்திற்குட்பட்ட பகுதிகளில் வெவ்வேறு நாட்களில் 18 வயதுக்குட்பட்ட சிறுமியை திருமணம் செய்தது தொடர்பாக கோட்டை மேட்டை சேர்ந்த கிருஷ்ணன் மகன் சதீஷ், குதிரைச்சந்தலை சேர்ந்த முனுசாமி மகன் பழனிவேல், வீரசோழபுரத்தை சேர்ந்த பச்சமுத்து மகன் தினேஷ், சிறுவங்கூரை சேர்ந்த பாலு மகன் அருள் ஆகிய 4 பேர் மீது கள்ளக்குறிச்சி அனைத்து மகளிர் போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us