/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
எலி பேஸ்ட் சாப்பிட்ட மனைவி கணவர் மீது வழக்கு பதிவு
/
எலி பேஸ்ட் சாப்பிட்ட மனைவி கணவர் மீது வழக்கு பதிவு
எலி பேஸ்ட் சாப்பிட்ட மனைவி கணவர் மீது வழக்கு பதிவு
எலி பேஸ்ட் சாப்பிட்ட மனைவி கணவர் மீது வழக்கு பதிவு
ADDED : அக் 05, 2024 05:04 AM
கள்ளக்குறிச்சி : வரஞ்சரம் அருகே மனைவியைத் தாக்கி, கொடுமைபடுத்திய கணவர்உட்பட 3 பேர் மீது போலீசார் வழக்குப் பதிந்தனர்.
வரஞ்சரம் அடுத்த சாத்தனுாரைச் சேர்ந்தவர் நடராஜன். இவரது மனைவி சிவரஞ்சினி, 29; சிங்கப்பூரில் பணிபுரிந்த நடராஜன் கடந்த 6 மாதங்களுக்கு முன் சொந்த ஊரான சாத்தனுாருக்கு வந்தார். கடன் வாங்கி தனது 2 குழந்தைகளுக்கு காதணி விழா நடத்தியுள்ளார்.
நடராஜன் மற்றும் அவரது தாய், தந்தை ஆகியோர் விழாவிற்காக வாங்கிய கடனை அடைக்க அவரது தாய் வீட்டிலிருந்து பணம், நகை வாங்கி வரும்படி சிவரஞ்சனியிடம் கூறியுள்ளனர். கடந்த 1ம் தேதி நடராஜன் மதுபோதையில் சிவரஞ்சினியை தாக்கியுள்ளார்.
இதனால் மனமுடைந்த சிவரஞ்சினி 2ம் தேதி எலிபேஸ்ட் சாப்பிட்டார். உடன், கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.
சிவரஞ்சினி அளித்த புகாரின் பேரில், கணவர் நடராஜன், மாமனார் மண்ணாங்கட்டி, மாமியார் பூங்காவனம் ஆகிய 3 பேர் மீதும் வரஞ்சரம் போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.