/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
கலெக்டர் ஆபீசில் தற்கொலைக்கு முயன்ற நபரால் பரபரப்பு
/
கலெக்டர் ஆபீசில் தற்கொலைக்கு முயன்ற நபரால் பரபரப்பு
கலெக்டர் ஆபீசில் தற்கொலைக்கு முயன்ற நபரால் பரபரப்பு
கலெக்டர் ஆபீசில் தற்கொலைக்கு முயன்ற நபரால் பரபரப்பு
ADDED : நவ 11, 2025 06:43 AM

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி கலெக்டர் அலுவலகத்திற்கு மனு அளிக்க வந்த நபர் திடீரென மண்ணெண்ணெய் ஊற்றி தற்கொலைக்கு முயன்றதால் பரபரப்பு நிலவியது.
கள்ளக்குறிச்சி அடுத்த தென்செட்டியந்தல் கிராமத்தைச் சேர்ந்த ராமசாமி மகன் அன்பழகன், 39; இவர், நேற்று கலெக்டர் அலுவலகத்திற்கு மனு அளிக்க வந்தவர் திடீரென தன் உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தற்கொலைக்கு முயன்றார்.
பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் அன்பழகனை தடுத்து நிறுத்தி விசாரித்தனர். பின், மனுவை கலெக்டரிடம் வழங்கி விட்டு செல்லும்படி அறிவுறுத்தினர்.
அதன்படி அன்பழகன் அளித்த மனு:
எனது தாய் கண்ணம்மாள் தென்செட்டியந்தல் கிராமத்தில் கடந்த 1990ம் ஆண்டு வீடு கட்டி வசித்தார். கடந்த 2010ம் ஆண்டு கண்ணம்மாள் இறப்புக்கு பிறகு, எனது மனைவி மற்றும் குழந்தைகளுடன் அந்த வீட்டை அனுபவித்து வருகிறேன்.
நாங்கள் குடியிருக்கும் வீடு பொது போக்குவரத்துக்கு இடையூறின்றி உள்ளது. முன்விரோதம் காரணமாக எனது கிராமத்தை சேர்ந்த ஒருவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து, நாங்கள் குடியிருக்கும் வீட்டினை இடிக்க உத்தரவு பெற்றுள்ளார்.
கடந்த செப்டம்பர் மாதம் 2ம் தேதி அதிகாரிகள் வீட்டினை இடிக்க அளவீடு செய்தனர். பொருளாதாரத்தில் பின் தங்கிய குடும்பத்தினர் என்பதால் வீட்டினை இடிக்க தடை விதிப்பதுடன், நாங்கள் வசிக்கும் இடத்திற்கு பட்டா வழங்க வேண்டும்.
இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.

