/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
கட்டிலிலிருந்து தவறி விழுந்தவர் பரிதாப பலி
/
கட்டிலிலிருந்து தவறி விழுந்தவர் பரிதாப பலி
ADDED : ஜூலை 07, 2025 02:26 AM
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி அருகே கட்டிலிலிருந்து தவறி விழுந்து படுகாயமடைந்தவர் இறந்தார்.
கள்ளக்குறிச்சி அடுத்த சிறுவங்கூரை சேர்ந்தவர் துரை, 46; உடல்நிலை பிரச்னை காரணமாக கடந்த ஓராண்டாக டயாலிஸ் சிகிச்சை பெற்று வந்தார்.
கடந்த 3ம் தேதி இரவு 11:00 மணிக்கு, வீட்டில் கட்டிலில் இருந்து இறங்கியபோது தவறி கீழே விழுந்தார். தலையில் பலத்த காயமடைந்த துரையை அவரது குடும்பத்தினர் மீட்டு கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் அனுமதித்து, மேல்சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.
அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் இரவு இறந்தார். இது குறித்த புகாரின் பேரில், கள்ளக்குறிச்சி போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.