/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
கிணற்றில் தவறி விழுந்தவர் பலி
/
கிணற்றில் தவறி விழுந்தவர் பலி
ADDED : நவ 18, 2024 06:21 AM

ரிஷிவந்தியம் : அத்தியூரில் விளைநில கிணற்றில் தவறி விழுந்த ஓய்வு பெற்ற கூட்டுறவு கடன் சங்க செயலாளர் இறந்தார்.
வாணாபுரம் அடுத்த அத்தியூரைச் சேர்ந்தவர் சின்னகண்ணு மகன் துரை, 61; ஓய்வு பெற்ற தொடக்க வேளாண்மைக் கூட்டுறவு கடன் சங்க செயலாளர். இவர், நேற்று முன்தினம் மதியம் 2:30 மணியளவில், மின் மோட்டாரை நிறுத்துவதற்காக அவரது நிலத்திற்குச் சென்றார். அப்போது, தவறி கிணற்றில் விழுந்தார்.
தகவலறிந்த அவரது குடும்பத்தினர் மற்றும் ஊர் பொதுமக்கள் சம்பவ இடத்துக்கு சென்று துரையை மீட்டு கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர் அன்று இரவு இறந்தார். புகாரின் பேரில் பகண்டைகூட்ரோடு போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.