/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
கிணற்றில் தவறி விழுந்தவர் பலி
/
கிணற்றில் தவறி விழுந்தவர் பலி
ADDED : பிப் 08, 2024 12:11 AM
திருக்கோவிலுார்: மணலுார்பேட்டை அருகே கிணற்றில் தவறி விழுந்தவர் இறந்தார்.
செல்லங்குப்பம் கிராமத்தைச் சேர்ந்தவர் அய்யனார், 47; சில நாட்களாக மனநிலை பாதிக்கப்பட்டு இருந்த நிலையில், நேற்று காலை 8:30 மணி அளவில் வீட்டை விட்டு வெளியில் சென்றவர் வெகுநேரமாகியும் வீடு திரும்பவில்லை.
பல இடங்களில் தேடினர். அப்போது, அதே பகுதியில் விவசாய கிணற்றில் அவரது செருப்பு மிதந்ததால் சந்தேகம் அடைந்து திருக்கோவிலூர் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.
தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து கிணற்றிலிருந்து அய்யனார் உடலை மீட்டனர். அவர் தவறி விழுந்து இறந்து இருக்கலாம் என போலீஸ் தரப்பில் தெரிவித்தனர்.
இதுகுறித்து அவரது மனைவி ஜெயந்தி, 37; கொடுத்த புகாரின் பேரில் மணலுார்பேட்டை போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

