/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
பைக் விபத்தில் காயமடைந்த வாலிபர் சிகிச்சை பலனின்றி பலி
/
பைக் விபத்தில் காயமடைந்த வாலிபர் சிகிச்சை பலனின்றி பலி
பைக் விபத்தில் காயமடைந்த வாலிபர் சிகிச்சை பலனின்றி பலி
பைக் விபத்தில் காயமடைந்த வாலிபர் சிகிச்சை பலனின்றி பலி
ADDED : ஜூன் 09, 2025 11:38 PM
சங்கராபுரம் : சங்கராபுரம் அருகே பைக் விபத்தில் படுகாயமடைந்த வாலிபர் சிகிச்சை பலனின்றி இறந்தார்.
சங்கராபுரம் அடுத்த செல்லம்பட்டு பகுதியைச் சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி மகன் ஜீவா, 25; இவர், கடந்த 5ம் தேதி ஸ்பிளண்டர் பைக்கில் பொய்குணம் நோக்கிச் சென்றார்.
பொய்குணம் ஏரிக்கரை அருகே சென்றபோது எதிரே வந்த சேஷசமுத்திரம் பகுதியைச் சேர்ந்த ராஜமாணிக்கம், 47; என்பவரது ஹீரோ பைக் மீது நேருக்கு நேர் மோதியது.
இதில் படுகாயமடைந்த இருவரையும் கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் சேர்த்து, மேல்சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று அதிகாலை 5:00 மணிக்கு ஜீவா இறந்தார்.புகாரின் பேரில் சங்கராபுரம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.