/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
ஊராட்சிகளில் மீண்டும் விளையாட்டு மைதானம் அமைக்க நடவடிக்கை தேவை
/
ஊராட்சிகளில் மீண்டும் விளையாட்டு மைதானம் அமைக்க நடவடிக்கை தேவை
ஊராட்சிகளில் மீண்டும் விளையாட்டு மைதானம் அமைக்க நடவடிக்கை தேவை
ஊராட்சிகளில் மீண்டும் விளையாட்டு மைதானம் அமைக்க நடவடிக்கை தேவை
ADDED : நவ 14, 2024 06:08 AM
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள அனைத்து ஊராட்சிகளிலும் விளையாட்டு மைதானம் அமைத்திட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தமிழகத்தில் கடந்த 2006 - 2011ம் ஆண்டு தி.மு.க., ஆட்சியின் போது, அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டம் கொண்டுவரப்பட்டது.
இத்திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்பட்ட வளர்ச்சி பணிகளில், அனைத்து ஊராட்சிகளிலும் விளையாட்டு மைதானம் அமைத்தது மிகவும் முக்கியம் வாய்ந்ததாகும்.
ஊராட்சிகளில் காலியாக உள்ள பொது இடத்தை சுத்தம் செய்து, அங்கு உடற்பயிற்சி உபகரணம், ஊஞ்சல், சறுக்கு மரம், ஏற்று, இறக்கு பலகை உள்ளிட்டவை அமைத்து விளையாட்டு மைதானமாக மாற்றப்பட்டது.
கிராமங்களில் வசிக்கும் பள்ளி, கல்லுாரி மாணவர்கள் விடுமுறை நாட்களில் விளையாட்டு மைதானத்திற்கு சென்று உடற்பயிற்சி செய்து வந்தனர்.
இந்த உபகரணங்களை பராமரிக்க ஆண்டுதோறும் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. ஆனால், முறையான பராமரிப்பு இல்லாததால், மைதானத்தில் நடப்பட்ட இரும்பிலான பொருட்கள் அனைத்தும் துரு பிடித்து மக்கியது.
காலப்போக்கில் விளையாட்டு உபகரண பொருட்கள் முற்றிலுமாக அகற்றப்பட்டது.
கிராமப்புற இளைஞர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற இத்திட்டம், தற்போது நடைமுறையில் இல்லை.
எனவே, கிராமப்புற மாணவர்கள் நலன் கருதி அனைத்து ஊராட்சிகளிலும் மீண்டும் விளையாட்டு மைதானம் உருவாக்கி, அங்கு உடற்பயிற்சி உபகரணங்கள் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

