sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, நவம்பர் 22, 2025 ,கார்த்திகை 6, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கள்ளக்குறிச்சி

/

'கால்நடைகள் கொண்டு செல்வதில் விதிமுறையை மீறினால் நடவடிக்கை'

/

'கால்நடைகள் கொண்டு செல்வதில் விதிமுறையை மீறினால் நடவடிக்கை'

'கால்நடைகள் கொண்டு செல்வதில் விதிமுறையை மீறினால் நடவடிக்கை'

'கால்நடைகள் கொண்டு செல்வதில் விதிமுறையை மீறினால் நடவடிக்கை'


ADDED : ஜன 24, 2025 06:36 AM

Google News

ADDED : ஜன 24, 2025 06:36 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி மாவட்டத்தில், வாகனங்களில் கால்நடைகள் கொண்டு செல்வது மற்றும் இறைச்சி கூடங்களில் வெட்டுவதில் விதிமுறைகளை மீறினால் நடவடிக்கை எடுக்கப்படும்.

இது குறித்து கலெக்டர் பிரசாந்த் விடுத்துள்ள செய்திகுறிப்பு;

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கால்நடைகளை அனுமதியின்றி வாகனங்களில் கொண்டு செல்வது, வாகனங்களில் கால்நடைகள் சுவாசிக்க போதுமான இடம் அளிக்காமல் அதி எண்ணிக்கையில் நெருக்கமாக ஏற்றி செல்வது சட்டப்படி குற்றமாகும். மேலும் போதிய உணவு, தண்ணீர் மற்றும் மருத்துவ வசதிகள், முதலுதவி வழங்காமல் கொண்டு செல்வதும் குற்றமாகும். விதிமுறைகளை மீறுபவர்கள் மீது எஸ்.பி.,க்கு தகவல் தெரிவித்து வழக்கு பதிவு செய்யப்படும்.

மேலும், வாகனங்களில் அளவுக்கு அதிகமாக கால்நடைகள் ஏற்றிச் செல்லும் வாகனங்கள் மீது வழக்கு பதிவு செய்து, கால்நடைகள் பறிமுதல் செய்யப்படும். விதிமுறைகளை மீறும் வாகன உரிமையாளர்களுக்கு அபராதம் விதிக்கப்படும்.

அதேபோல் இறைச்சி கூடங்களில் கால்நடைகள் வெட்டுப்படுவது தொடர்பாக மிருகவதை தடுப்பு விதிகளின் கீழ் கண்காணிக்கப்படும். இறைச்சி கூடங்களில் வெட்டப்படும் கால்நடைகள், கால்நடை உதவி மருத்துவர்களால் பரிசோதிக்கப்பட்டு உரிய சான்று பெற்ற பின்னரே கால்நடைகள் இறைச்சி கூடங்களில் வெட்டப்பட்டு முத்திரையிடப்பட்டு பின்பு விற்பனைக்கு அனுப்ப வேண்டும்.

கால்நடைகளை இறைச்சிக்காக வெட்டுவதற்கு தனி நபர்கள் தகுதிவாயந்த அதிகார அமைப்பினரிடம் விண்ணப்பித்து உரிய சான்று பெற வேண்டும்.

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.






      Dinamalar
      Follow us