sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கள்ளக்குறிச்சி

/

பெரியனுார் கிராமத்தில் அட்மா திட்ட வயல்விழா

/

பெரியனுார் கிராமத்தில் அட்மா திட்ட வயல்விழா

பெரியனுார் கிராமத்தில் அட்மா திட்ட வயல்விழா

பெரியனுார் கிராமத்தில் அட்மா திட்ட வயல்விழா


ADDED : ஜன 22, 2025 09:25 AM

Google News

ADDED : ஜன 22, 2025 09:25 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கள்ளக்குறிச்சி : பெரியனுார் கிராமத்தில் வேளாண் துறை சார்பில் அட்மா திட்ட வயல்விழா நடந்தது.

திருக்கோவிலுார் அடுத்த பெரியனுார் கிராமத்தில் வேளாண் துறை சார்பில் நடந்த அட்மா திட்ட வயல்விழாவிற்கு வேளாண் உதவி இயக்குனர் கிருஷ்ணகுமாரி தலைமை தாங்கினார்.

ஊராட்சி தலைவி ராணிவிஜியராமன் முன்னிலை வகித்தார்.நிகழ்ச்சியில் மத்திய, மாநில வேளாண் திட்டங்கள், பணமில்லா பரிவர்த்தனை, விதை இருப்பு விபரம் குறித்து விளக்கப்பட்டது.

அத்தியந்தல் சிறுதானிய மகத்துவ மைய வேளாண் பேராசிரியர் அய்யாதுரை விவசாயிகளுக்கு அங்கக வேளாண்மை மற்றும் உளுந்து பயிர் சாகுபடி விதைப்பு முதல் அறுவடை வரை உள்ள பூச்சி நோய் கட்டுப்படுத்துதல், உர மேலாண்மை, நீர் மேலாண்மை தொழில்நுட்பங்கள் குறித்து பேசினார்.

உதவி வேளாண் அலுவலர் ஜெயப்பிரகாஷ் வேளாண் துறையில் உள்ள மானிய திட்டங்கள் குறித்து பேசினார்.

வட்டார தொழில்நுட்ப மேலாளர் மணிமேகலை, உயிர் உரத்தின் முக்கியத்துவம், உழவன் செயலி பயன்பாடு குறித்து விளக்கினார். உதவி தொழில்நுட்ப மேலாளர்கள் பிரகலாதன், செல்லன் நிகழ்ச்சியை ஒருங்கிணைத்தனர்.






      Dinamalar
      Follow us