sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், நவம்பர் 05, 2025 ,ஐப்பசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கள்ளக்குறிச்சி

/

'ஜகா' வாங்கும் அ.தி.மு.க., நிர்வாகிகள்; நானே களம் இறங்குவேன்: மா.செ., ஆவேசம்

/

'ஜகா' வாங்கும் அ.தி.மு.க., நிர்வாகிகள்; நானே களம் இறங்குவேன்: மா.செ., ஆவேசம்

'ஜகா' வாங்கும் அ.தி.மு.க., நிர்வாகிகள்; நானே களம் இறங்குவேன்: மா.செ., ஆவேசம்

'ஜகா' வாங்கும் அ.தி.மு.க., நிர்வாகிகள்; நானே களம் இறங்குவேன்: மா.செ., ஆவேசம்


ADDED : மார் 19, 2024 10:45 PM

Google News

ADDED : மார் 19, 2024 10:45 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கள்ளக்குறிச்சி லோக்சபா தொகுதி உதயமான பின்பு நடந்த மூன்று தேர்தல்களிலும் தி.மு.க., நேரடியாக களம் கண்டு இரு முறை வெற்றி பெற்றுள்ளது. ஒருமுறை அ.தி.மு.க., வெற்றி பெற்றது. தற்போது நான்காவதாக முறையாக தி.மு.க., கூட்டணி பலத்துடன் போட்டியிட தயாராகி வருகிறது.

கள்ளக்குறிச்சி மற்றும் சேலம் மாவட்டங்களில் தலா மூன்று சட்டசபை தொகுதிகளை கொண்டுள்ளது. இதில் 4 சட்டசபை தொகுதிகள் அ.தி.மு.க., வசமும், 2 சட்டசபை தி.மு.க., வசமும் உள்ளது. இருப்பினும் தி.மு.க.,வில் 'சீட்' பெற்று போட்டியிட உடன்பிறப்புகள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

அ.தி.மு.க.,வில், பலர் விருப்ப மனு அளித்திருந்தாலும், கூட்டணி பலம் இல்லாததால் போட்டியிட தயக்கம் காட்டுகின்றனர். கட்சி தலைமை முக்கிய நிர்வாகிகளை போட்டியிடுமாறு வலியுறுத்தினால் 'ப' வசதி இல்லை என்ற காரணத்தை கூறி தட்டி கழிக்கின்றனர். தேர்தல் செலவுகள் முழுவதையும் கட்சி தலைமை ஏற்றுக் கொண்டால் நிற்க தயாராக இருப்பதாக கூறி நழுவிக் கொள்கின்றனர்.

இதனால் மாவட்ட செயலாளர் குமரகுரு, கூட்டணி கட்சிகளுக்கு கள்ளக்குறிச்சி தொகுதியை ஒதுக்காதபட்சத்தில் தானே நிற்கப்போவதாக கட்சி நிர்வாகிகள் கூட்டத்தில் ஆவேசத்துடன் கூறி வருகிறார். தற்போது அ.தி.மு.க.,வுடன் தே.மு.தி.க., கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.

கூட்டணி உறுதியானால் தே.மு.தி.க., கள்ளக்குறிச்சி தொகுதியை கேட்டு பெறுவதற்கான சூழல் இருப்பதாக கூறப்படுகிறது.

-நமது நிருபர்-






      Dinamalar
      Follow us