/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
அ.தி.மு.க., செயல்வீரர்கள் கூட்டம்
/
அ.தி.மு.க., செயல்வீரர்கள் கூட்டம்
ADDED : அக் 19, 2024 04:45 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
உளுந்துார்பேட்டை : உளுந்துார்பேட்டை நகர அ.தி.மு.க., செயல்வீரர்கள் கூட்டம் நடந்தது.
கூட்டத்திற்கு நகர அவைத் தலைவர் ஜெயபால் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் குமாரகுரு, மாணவரணி செயலாளர் விஜயகுமார் சிறப்புரையாற்றினர். நகர செயலாளர் துரை முன்னிலை வகித்தார்.
மாவட்ட அவைத் தலைவர் பச்சையாபிள்ளை, மாணவரணி செயலாளர் பாக்கியராஜ், முன்னாள் மாவட்ட அவை தலைவர் ராமசாமி, முன்னாள் அறங்காவலர் குழு தலைவர் சேகர், வழக்கறிஞர் திலீப், வட்டார செயலாளர் வெங்கடேசன், காமேஷ் உட்பட பலர் பங்கேற்றனர்.
கூட்டத்தில், வளர்ச்சிப் பணிகள் மற்றும் மக்கள் பணிகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது. நகரத் துணைச் செயலாளர் கோபால் நன்றி கூறினார்.