ADDED : அக் 20, 2024 03:24 AM

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சியில் மாவட்ட அ.தி.மு.க., சார்பில் 53ம் ஆண்டு துவக்க விழா பொதுக்கூட்டம் நடந்தது.
கூட்டத்திற்கு, மாவட்ட செயலாளர் குமரகுரு தலைமை தாங்கினார். அவைத் தலைவர் பச்சையாப்பிள்ளை, ஒன்றிய செயலாளர்கள் ராஜசேகர், ராஜேந்திரன், அய்யப்பா, கிருஷ்ணமூர்த்தி, அய்யம்பெருமாள், கதிர் தண்டபாணி, அருணகிரி, துரைராஜ், டி.ராஜேந்திரன், அரசு இளந்தேவன், பழனி, சேகர், சந்தோஷ், பழனிசாமி, இளங்கோவன், தனபால்ராஜ், செண்பகவேல், சந்திரன், ஏகாம்பரம், ராமலிங்கம், நகர செயலாளர்கள் சுப்பு, ஷியாம்சுந்தர், ராகேஷ், ரமேஷ் முன்னிலை வகித்தனர். நகர செயலாளர் பாபு வரவேற்றார். சிறப்பு அழைப்பாளர் முன்னாள் அமைச்சர் உதயகுமார், செய்தி தொடர்பாளர் பாபுமுருகவேல், முன்னாள் அமைச்சர் மோகன், எம்.எல்.ஏ., செந்தில்குமார், முன்னாள் எம்.எல்.ஏ.,க்கள் அழகுவேல்பாபு, பிரபு ஆகியோர் பேசினர்.
பிற அணி செயலாளர்கள் ஞானவேல், பாக்கியராஜ், தங்கபாண்டியன், சீனுவாசன், வினோத், ஜான்பாஷா, அய்யாக்கண்ணு, கிருஷ்ணமூர்த்தி, உமாசங்கர், துணை செயலாளர் பரமாத்மா உட்பட பலர் பங்கேற்றனர். ஒன்றிய செயலாளர் தேவேந்திரன் நன்றி கூறினார்.