/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
முன்விரோத தகராறு; ஒருவர் கைது
/
முன்விரோத தகராறு; ஒருவர் கைது
ADDED : மார் 04, 2024 12:17 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கள்ளக்குறிச்சி : சிறுமங்கலத்தில் தகராறில் ஈடுபட்டது தொடர்பாக இரு தரப்பை சேர்ந்த 4 பேர் மீது வழக்கு பதிந்து, ஒருவரை கைது செய்தனர்.
கள்ளக்குறிச்சி அடுத்த சிறுமங்கலத்தைச் சேர்ந்தவர் சடையன், 38; அதே பகுதியைச் சேர்ந்தவர் அய்யனார் மகன் முருகையன். இருவருக்குமிடையே முன்விரோதம் உள்ளது.
இது தொடர்பாக கடந்த 2ம் தேதி இருவருக்கும் இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டது. அதில், இரு தரப்பினரும் தாக்கிக் கொண்டனர்.
இதுகுறித்து இரு தரப்பு புகாரின் பேரில் முருகையன், சடையன், முருகேசன், கொடிவேல், 37; ஆகிய 4 பேர் மீது வழக்குப் பதிந்து கொடிவேலை கைது செய்தனர்.

