ADDED : ஜூன் 02, 2025 12:19 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கச்சிராயபாளையம்: எடுத்தவாய்நத்தம் கிராமத்தில் வேளாண் துறை சார்பில் உழவரைத் தேடி வேளாண் திட்ட முகாம் நடந்தது.
நிகழ்ச்சிக்கு, வேளாண் உதவி இயக்குநர் பொன்னுராசன் தலைமை தாங்கினார். வேளாண் அலுவலர் முத்துராஜ், விதைச்சான்று அலுவலர் நடராஜன் முன்னிலை வகித்தனர். வேளாண் பொறியாளர் கண்ணன் வரவேற்றார்.
நிகழ்ச்சியில், விவசாயிகளுக்கு தென்னங்கன்றுகள், வேளாண் இடுபொருட்கள் வழங்கப்பட்டது.
தோட்டக்கலை அலுவலர் அன்பரசன், உதவி வேளாண் அலுவலர்கள் மணிகண்டன், சூரிய பிரகாசம் பழனிச்சாமி உட்பட பலர் பங்கேற்றனர்.