ADDED : ஜூன் 09, 2025 04:55 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருக்கோவிலுார் : திருக்கோவிலுாரில் நடந்த வேளாண் சிறப்பு முகாமில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
திருக்கோவிலுார், பெண்கள் மேல்நிலைப்பள்ளி விளையாட்டு மைதானத்தில், வேளாண் கருவிகள் பராமரிப்பு குறித்த கண்காட்சி முகாம், நடந்தது.
வேளாண் பொறியியல் துறை செயற்பொறியாளர் சுமதி வரவேற்றார்.
சப் கலெக்டர் ஆனந்த் குமார் சிங் முகாமை துவக்கி வைத்தார். தாசில்தார் ராமகிருஷ்ணன் முன்னிலை வகித்தார். உதவி செயற்பொறியாளர் பாஸ்கர் உள்ளிட்டோர் கலந்து கொண்டு வேளாண் உபகரணங்களின் செயல்பாடுகள் குறித்து விவசாயிகளுக்கு விளக்கி கூறினர்.