ADDED : செப் 20, 2025 07:16 AM

கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சியில் அ.தி.மு.க., சார்பில் முன்னாள் முதல்வர் அண்ணா துரை பிறந்த நாள் விழா பொதுக்கூட்டம் நடந்தது.
மந்தைவெளியில் நடந்த கூட்டத்திற்கு. மாவட்ட செயலாளர் குமரகுரு தலைமை தாங்கினார். முன்னாள் எம்.எல்.ஏ.,க்கள் அழகுவேல்பாபு, பிரபு, முன்னாள் எம்.பி., காமராஜ், ஒன்றிய செயலாளர்கள் ராஜசேகர், அய்யப்பா, கிருஷ்ணமூர்த்தி, ராஜேந்திரன், அய்யம்பெருமாள், நகர செயலாளர் ஷியாம்சுந்தர், ராகேஷ் முன்னிலை வகித்தனர். நகர செயலாளர் பாபு வரவேற்றார்.
கூட்டத்தில், மாநில இலக்கிய அணி செயலாளர் வைகைச்செல்வன், முன்னாள் அமைச்சர் மோகன், செந்தில்குமார் எம்.எல்.ஏ., தலைமை கழக பேச்சாளர் அன்பழகன் சிறப்புரையாற்றினர்.
மாவட்ட அவை தலைவர் பச்சையாப்பிள்ளை, ஜெ., பேரவை செயலாளர் ஞானவேல், மருத்துவரணி துணை செயலாளர் பொன்னரசு, வழக்கறிஞரணி செயலாளர் சீனுவாசன், எம்.ஜி.ஆர்.,மன்ற செயலாளர் தங்கபாண்டியன்.
பாசறை செயலாளர் வினோத், எம்.ஜி.ஆர்., இளைஞரணி செயலாளர் ராஜீவ்காந்தி, சிறுபான்மை பிரிவு செயலாளர் ஜான்பாஷா, அண்ணா தொழிற்சங்க செயலாளர் அய்யாக்கண்ணு உட்பட மாவட்ட, ஒன்றிய, நகர நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர்.