ADDED : ஏப் 12, 2025 05:08 AM

தியாகதுருகம் : தியாகதுருகம் அடுத்த விருகாவூரில், அ.தி.மு.க., ஜெ.,பேரவை சார்பில் திண்ணைப் பிரச்சாரம் மற்றும் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெ., அரசின் சாதனைகளை விளக்கி துண்டு பிரசுரம் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.
மாவட்ட செயலாளர் குமரகுரு தலைமை தாங்கி, பிரச்சாரத்தை துவக்கி வைத்தார். செந்தில்குமார் எம்.எல்.ஏ., முன்னாள் எம்.எல்.ஏ.,க்கள் பிரபு, அழகுவேல்பாபு, ஜெ., பேரவை செயலாளர் ஞானவேல், ஒன்றிய செயலாளர்கள் கிருஷ்ணமூர்த்தி, அய்யப்பா, நகர செயலாளர் ஷியாம்சுந்தர், சிறுபான்மை பிரிவு செயலாளர் ஜான்பாஷா முன்னிலை வகித்தனர்.
ஒன்றிய ஜெ., பேரவை செயலாளர் மஞ்சமுத்து வரவேற்றார். மாவட்ட பொறுப்பாளர் சங்கரதாஸ் பேசினார்.
மாவட்ட அவை தலைவர் பச்சையாப்பிள்ளை, ஒன்றிய செயலாளர்கள் ராஜசேகர், தேவேந்திரன், ராஜேந்திரன், அய்யம்பெருமாள், பிற அணி செயலாளர்கள் தங்கபாண்டியன், அய்யாக்கண்ணு, சீனுவாசன், வினோத், ராஜீவ்காந்தி, பேரவை இணை செயலாளர் ராஜேந்திரன், மணிவண்ணன், துணை செயலாளர் பார்த்தசாரதி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

