ADDED : செப் 08, 2025 03:17 AM

சங்கராபுரம்:புதுப்பாலப்பட்டில் அ.தி.மு.க., ஜெ., பேரவை சார்பில் திண்ணை பிரசாரம் நடந்தது.
சங்கராபுரம் அடுத்த புதுப்பாலப்பட்டு கிராமத்தில் ஜெ., பேரவை சார்பில் திண்ணை பிரச்சாரம் மற்றும் அ.தி.மு.க., ஆட்சியின் சாதனைகள் குறித்த துண்டு பிரசுரம் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சிக்கு மாவட்ட ஜெ.,பேரவை செயலாளர் ஞானவேல் தலைமை தாங்கினார்.
முன்னாள் அமைச்சர் மோகன், செந்தில்குமார் எம்.எல்.ஏ., துணை செயலாளர் சன்னியாசி, மருத்துவரணி இணை செயலாளர் பொன்னரசு, ஒன்றிய செயலாளர் அசோகன், பேரவை இணை செயலாளர் ரவி முன்னிலை வகித்தனர். ஒன்றிய செயலாளர் குப்பன் வரவேற்றார்.
மாவட்ட செயலாளர் குமரகுரு பங்கேற்று அ.தி.மு.க., ஆட்சியின் சாதனைகள் குறித்த துண்டு பிரசுரங்களை வழங்கி திண்ணை பிரசாரத்தை துவக்கி வைத்தார்.
மாவட்ட அவை தலைவர் பச்சையாப்பிள்ளை, துணை செயலாளர் உமாஜெயவேல், ஒன்றிய செயலாளர்கள் ராஜேந்திரன், ராஜாராம், தேவேந்திரன், நகர செயலாளர் நாராயணன் , பிற அணி செயலாளர்கள் பாண்டியன், சீனிவாசன், ராஜிவ்காந்தி, வினோத், கிருஷ்ணமூர்த்தி உட்பட பலர் பங்கேற்றனர்.
ஒன்றிய பேரவை செயலாளர் சீத்தாாராமன் நன்றி கூறினார்.