/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
பக்தஜனஸ்வரர் கோவிலில் ஆயிஷா யாகம்
/
பக்தஜனஸ்வரர் கோவிலில் ஆயிஷா யாகம்
ADDED : மே 13, 2025 07:20 AM
உளுந்துார்பேட்டை : திருநாவலூர் பக்தஜனஸ்வரர் கோவிலில் மாவட்ட அ.தி.மு.க., மற்றும் மாணவரணி சார்பில் ஆயிஷா யாகம் மற்றும் சிறப்பு பூஜை நடந்தது.
கள்ளக்குறிச்சி மாவட்ட அ.தி.மு.க., மற்றும் மாணவர் அணி சார்பில் திருநாவலுார் பக்தஜனஸ்வரர் கோவிலில் முப்படை தளபதிகள், ராணுவ வீரர்கள் நீண்ட ஆயுள் பெறவும், முன்னாள் முதல்வர் பழனிசாமி பிறந்தநாளையொட்டியும் ஆயிஷா யாகம் மற்றும் சிறப்பு பூஜை நடந்தது.
நிகழ்ச்சிக்கு, மாவட்ட செயலாளர் குமரகுரு தலைமை தாங்கினார். முன்னாள் அமைச்சர் மோகன், செந்தில்குமார் எம்.எல்.ஏ., முன்னாள் எம்.எல்.ஏ., பிரபு, மாணவரணி செயலாளர் பாக்கியராஜ், மாவட்ட துணைச் செயலாளர் பரமாத்மா, ஒன்றிய செயலாளர்கள் செண்பகவேல், சந்திரன் முன்னிலை வகித்தனர்.
ஒன்றிய செயலாளர்கள் ஏகாம்பரம், ராமலிங்கம், ராஜசேகர், தேவேந்திரன், ராஜேந்திரன், ஐயப்பா, ஐயம்பெருமாள், கிருஷ்ணமூர்த்தி, அருணகிரி, துரைராஜ், சேகர், சந்தோஷ் குமார், பழனிசாமி, பழனி, நகர செயலாளர்கள் பாபு, சுப்பு, மாநில இளைஞரணி துணைச் செயலாளர் ராஜிவ் காந்தி, சிறுபான்மை பிரிவு துணைச் செயலாளர் ஜான்பாஷா, இலக்கிய அணி சதீஷ்பாண்டியன், வழக்கறிஞரணி செயலாளர் சீனிவாசன், மகளிர் அணி செயலாளர் அமுதா, நிர்வாகிகள் மகேஷ், முத்துராமன், பழனி மலை, வெங்கடேசன், வெற்றிவேல் உட்பட பலர் பங்கேற்றனர்.