ADDED : ஜூலை 15, 2025 07:18 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சங்கராபுரம் : சங்கராபுரம் அருகே மதுபாட்டில் விற்றவரை போலீசார் கைது செய்தனர்.
சங்கராபுரம் சப் இன்ஸ்பெக்டர் பிரதாப்குமார் மற்றும் போலீசார் நேற்று காலை 11:00 மணிக்கு மூரார்பாளையம் டாஸ்மாக் கடையின் அருகே சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது, கள்ளக்குறிச்சி, சித்தேரி தெருவைச் சேர்ந்த ஜான்கென்னடி மகன் தனவேந்திரன், 36; நாராயணன் மகன் சீனுவாசன் ஆகியோர் மதுபாட்டில் விற்பனை செய்தது தெரிந்தது.
இதனையடுத்து தனவேந்திரனை போலீசார் கைது செய்து, தப்பியோடிய சீனுவாசனை தேடி வருகின்றனர். மேலும் 10 குவாட்டர் பாட்டில், 200 ரூபாயை பறிமுதல் செய்தனர்.