/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
ஆஞ்சநேயர் கோவில் கும்பாபிஷேகம்
/
ஆஞ்சநேயர் கோவில் கும்பாபிஷேகம்
ADDED : ஜூலை 07, 2025 08:21 PM

திருக்கோவிலுார்; திருக்கோவிலுார் சுதர்சன வீர ஆஞ்சநேயர் கோவில் கும்பாபிஷேகம் நடந்தது.
திருக்கோவிலுார் பெருமாள் நாயக்கர் வீதியில், வேணுகோபால பெருமாள், சுதர்சன வீர ஆஞ்சநேயர், விஷ்ணு, துர்க்கை, ஸ்ரீ விநாயகர் மற்றும் நவக்கிரகங்களுடன், வீர ஆஞ்சநேயர் கோவில் உள்ளது. புனரமைக்கப்பட்ட இக்கோவில் கும்பாபிஷேக விழா, கடந்த 5ம் தேதி யாகசாலை பூஜையுடன் துவங்கியது.
நேற்று காலை 7:00 மணிக்கு புண்யாகம், கோ பூஜை, அக்னி ஆராதனம், கும்ப ஆராதனம், பிரதான ஹோமங்கள், யாத்ரா தானம், கலசம் புறப்பாடாகி விமானம் மற்றும் பரிவார மூர்த்திக்கு புனித நீர் ஊற்றி, மகா கும்பாபிஷேகம் நடந்தது. ஜீயர் தேகளீச ராமானுஜாச்சாரியார் சுவாமிகள் தலைமையில் நடந்த விழாவில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.