ADDED : பிப் 11, 2024 03:21 AM

அ நிறம் | அளவு
சங்கராபுரம்: சங்கராபுரம் அடுத்த பாச்சேரி கிராமத்தில் கஸ்துார்பா காந்தி உண்டு உறைவிட பள்ளியில் ஆண்டு விழா நடந்தது.
பள்ளி நிர்வாகி இதயதுல்லா தலைமை தாங்கினார். பள்ளி மேலாண்மைக் குழு தலைவர் சந்திரலேகா, கணேசன், வார்டு உறுப்பினர்கள் அன்பழகன், இளங்கோவன் முன்னிலை வகித்தனர்.
பள்ளி தலைமை ஆசிரியை ஜெயலட்சுமி வரவேற்றார்.
கலை, இலக்கிய போட்டிகள் நடத்தப்பட்டு வெற்றி பெற்ற மாணவர்களுக்கு ஊராட்சி தலைவர் துரைசாமி பரிசு வழங்கினார்.
நிகழ்ச்சி ஏற்பாடுகளை பள்ளி ஆசிரியர்கள் ஜென்சி, இளவரசி, பாரதி, ஜெயந்தி செய்திருந்தனர். ஒருங்கிணைப்பாளர் வினோதினி நன்றி கூறினார்.
