/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
கல்பனா சாவ்லா விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு
/
கல்பனா சாவ்லா விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு
ADDED : ஜூன் 14, 2025 01:10 AM
கள்ளக்குறிச்சி : தமிழக அரசின் கல்பனா சாவ்லா விருதுக்கு விண்ணப்பிக்கலாம் என, கலெக்டர் பிரசாந்த் தெரிவித்துள்ளார்.
அவர் விடுத்த செய்திக்குறிப்பு:
சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறையின் மூலம் ஆண்டுதோறும் சுதந்திர தினத்தன்று வீர தீர செயல்கள் புரிந்த பெண்களுக்கு அரசின் கல்பனா சாவ்லா விருது வழங்கப்பட்டு வருகிறது.
இந்த விருதுக்கு தமிழ்நாட்டை பிறப்பிடமாக கொண்ட, கள்ளக்குறிச்சி மாவட்டத்தை சேர்ந்தவர்கள் https://award.tn.gov.in என்ற இணையதளத்தில் வரும் 16ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்.
மேலும் விண்ணப்பதாரர்கள் இணையதளத்தில் விண்ணப்பங்களை பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்து உரிய சான்றுகளுடன் வரும், 17 ம் தேதி மாலை 5:00 மணிக்குள் கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள மாவட்ட சமூக நல அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டும்.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.