/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
சட்ட உதவி அலுவலக பணியிடத்திற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது
/
சட்ட உதவி அலுவலக பணியிடத்திற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது
சட்ட உதவி அலுவலக பணியிடத்திற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது
சட்ட உதவி அலுவலக பணியிடத்திற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது
ADDED : ஜன 09, 2025 12:29 AM
கள்ளக்குறிச்சி; விழுப்புரம் சட்ட உதவி பாதுகாப்பு ஆலோசனை அமைப்பு அலுவலகத்தில் காலிப்பணியிடத்திற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.
இதுகுறித்து விழுப்புரம் மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக் குழு தலைவரான முதன்மை மாவட்ட நீதிபதி செய்திக்குறிப்பு :
விழுப்புரம் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் கீழ் இயங்கி வரும் சட்ட உதவி பாதுகாப்பு ஆலோசனை அமைப்பு அலுவலகத்தில் அலுவலக உதவியாளர்/எழுத்தர்கள்-1, அலுவலக பியூன் (முன்ஷி/உதவியாளர்)--2 ஆகிய காலிப் பணியிடங்கள் உள்ளன.
இந்த காலிப் பணியிடங்கள் குறித்த விரிவான விபரங்கள், விண்ணப்பங்கள் மற்றும் இதர தகவல்களை https://viluppuram.dcourts.gov.in/ என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். மேலும் பூர்த்தி செய்த விண்ணப்பங்களை வரும் 22-ம் தேதி மாலை 5:00 மணிக்குள் தலைவர், முதன்மை மாவட்ட நீதிபதி, மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக்குழு, மாவட்ட நீதிமன்ற வளாகம், விழுப்புரம் மாவட்டம் என்ற முகவரிக்கு அனுப்ப வேண்டும். கடைசி தேதிக்கு பின்னர் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது என முதன்மை மாவட்ட நீதிபதி தெரிவித்துள்ளார்.