sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கள்ளக்குறிச்சி

/

இயற்கை முறையில் பயிர் சாகுபடிக்கு மாநில விருது விண்ணப்பம் வரவேற்பு

/

இயற்கை முறையில் பயிர் சாகுபடிக்கு மாநில விருது விண்ணப்பம் வரவேற்பு

இயற்கை முறையில் பயிர் சாகுபடிக்கு மாநில விருது விண்ணப்பம் வரவேற்பு

இயற்கை முறையில் பயிர் சாகுபடிக்கு மாநில விருது விண்ணப்பம் வரவேற்பு


ADDED : டிச 18, 2024 07:48 AM

Google News

ADDED : டிச 18, 2024 07:48 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கள்ளக்குறிச்சி : இயற்கை முறையில் தோட்டக்கலை பயிர் சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கு மாநில அளவில் விருதுகள் வழங்கப்பட உள்ளது.

கலெக்டர் பிரசாந்த் செய்திக்குறிப்பு:

இயற்கை முறையில் தோட்டக்கலை பயிர் சாகுபடி செய்யும் விவசாயிகளை ஊக்குவிக்கும் நோக்கத்துடன் மாநில அளவில் விருதுகள் வழங்கப்படுகிறது.

அதன்படி கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் இயற்கை முறையில் தோட்டக்கலை பயிர்களை சிறப்பாக விவசாயம் செய்யும் விவசாயிகளுக்கு சான்றிதழுடன் ஊக்கத்தொகையாக முதல் பரிசு ஒரு லட்சம் ரூபாய், இரண்டாம் பரிசு 60 ஆயிரம் ரூபாய், மூன்றாம் பரிசு 40 ஆயிரம் ரூபாய் வழங்கப்பட உள்ளது.

இதற்கான விண்ணப்ப படிவம் மற்றும் வழிகாட்டு நெறிமுறைகள் தோட்டக்கலைத் துறையின் இணைய தளத்தில் (www.tnhorticulture.tn.gov.in) பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.

ஆர்வமுள்ள விவசாயிகள் தங்கள் விண்ணப்பங்களை வட்டார தோட்டக்கலை உதவி இயக்குனர் அலுவலகங்களில் வரும் 26ம் தேதிக்குள் சமர்ப்பித்து பயன்பெறலாம்.

இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us