நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சி அடுத்த சித்தலுாரைச் சேர்ந்தவர் பிச்சைமுத்து மகன் ஏழுமலை,21; கடந்த 17ம் தேதி கோவில் திருவிழாவில் நண்பர்களுடன் மணிமுக்தா ஆற்று பகுதியில் இருந்த கடைத்தெருவுக்கு சென்றனர்.அப்போது, வேங்கைவாடியை சேர்ந்த ரஜினி மகன் சுரதிப் தரப்பினர் அதிகம் சத்தம் எழுப்பியதில் தகராறு ஏற்பட்டு,சுரதிப் தரப்பினர் ஏழுமலையை தாக்கி, கொலை மிரட்டல் விடுத்தனர்.
வரஞ்சரம் போலீசார் வழக்குப் பதிந்து சுரதிப் உள்ளிட்ட 3 பேரை கைது செய்தனர்.

