sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 11, 2025 ,புரட்டாசி 25, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கள்ளக்குறிச்சி

/

சரத்குமார் பிறந்த நாள் நலத்திட்ட உதவி வழங்க ஏற்பாடு

/

சரத்குமார் பிறந்த நாள் நலத்திட்ட உதவி வழங்க ஏற்பாடு

சரத்குமார் பிறந்த நாள் நலத்திட்ட உதவி வழங்க ஏற்பாடு

சரத்குமார் பிறந்த நாள் நலத்திட்ட உதவி வழங்க ஏற்பாடு


ADDED : ஆக 23, 2025 05:43 AM

Google News

ADDED : ஆக 23, 2025 05:43 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கள்ளக்குறிச்சி உலகங்காத்தானில் பா.ஜ., தேசிய பொதுக்குழு உறுப்பினர் சரத்குமார் பிறந்த நாளையொட்டி நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நாளை 24ம் தேதி நடக்கிறது.

பா.ஜ., தேசிய பொதுக்குழு உறுப்பினர் நடிகர் சரத்குமாரின் 71வது பிறந்த நாளையொட்டி பா.ஜ., சார்பில் கள்ளக்குறிச்சி அடுத்த உலகங்காத்தான் மில் கேட்டில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நாளை 24ம் தேதி மாலை 4:00 மணிக்கு நடக்கிறது. இதற்காக நடந்து வரும் பொதுக்கூட்ட மேடை அமைக்கும் பணியினை பா.ஜ., நிர்வாகி ஈஸ்வரன் பார்வையிட்டு ஆய்வு செய்து, கூறியதாவது;

பா.ஜ., தேசிய பொதுக்குழு உறுப்பினர் சரத்குமார் பிறந்த நாளையொட்டி கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள அரசு பள்ளிகளில் கடந்த ஆண்டு 10 மற்றும் பிளஸ் 2 பொதுத்தேர்வில் சிறந்த மதிப்பெண் பெற்ற மாணவ, மாணவிகளுக்கு லேப்டாப் மற்றும் டேப்லெட்கள் வழங்கப்படுகிறது.

பார்வை குறைபாடு உடையவர்களுக்கு கண் கண்ணாடி, விவசாயிகளுக்கு ஸ்பிரேயர் இயந்திரம், காதுகேட்கும் கருவிகள், 25 நுாலகங்களுக்கு புத்தக தொகுப்புகள் உட்பட 500க்கும் மேற்பட்டோருக்கு பல்வேறு நலத்திட்ட உதவி பொருட்கள் வழங்கப்பட உள்ளது. நிகழ்ச்சியில் பா.ஜ., மாநில தலைவர் நயினார் நாகேந்திரன், தேசிய பொதுக்குழு உறுப்பினர் சரத்குமார் உட்பட முக்கிய நிர்வாகிகள் பலர் கலந்து கொள்ள உள்ளனர் என கூறினார்.

ஆய்வின் போது பா.ஜ., கள்ளக்குறிச்சி மாவட்ட தலைவர் பாலசுந்தரம், மாவட்ட பொருளாளர் ஸ்ரீசந்த், மாவட்ட செயலாளர் கோவிந்தசாமி, வர்த்தக பிரிவு மாவட்ட துணைத்தலைவர் கண்ணன் மற்றும் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.






      Dinamalar
      Follow us